வெளிமாநில மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் புதுச்சேரி மதுபானங்களை விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார், நேற்று ஜி.ஆர்.பி., தெருவில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் ராஜா (எ) ஒடுக்கு ராஜா, 40; பாலு மகன் உதயகுமார், 40; நாராயணன் மகன் முத்துவேல், 42; என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள், அப்பகுதியில் புதுச்சேரி மதுபானங்களை வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடன் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 148 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
Advertisement