12 பேரை கடித்த நாய் அடித்து கொன்ற மக்கள்
செஞ்சி: செஞ்சி அருகே 12 பேரை கடித்து குதறிய நாயை கிராம மக்கள் அடித்து கொன்றனர்.
செஞ்சி அடுத்த மேல்சித்தாமூர் கிராமத்தில் நேற்று மதியம் பிள்ளையார் கோவில் தெரு, மேட்டுத் தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றவர்களை அப்பகுதியில் திரிந்த நாய் கடித்தது.
இதில், பொன்னம்மாள், முருகேசன், அன்னம்மாள், செல்வி, தனம், கஸ்துாரி, ஸ்வேதா, தர்மன், நாகம்மாள், சங்கர் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதே நாய் 2 கன்று குட்டிகளையும் கடித்து காயப்படுத்தியது.
இதனால் பீதியடைந்த கிராம மக்கள் நேற்று மாலை அந்த நாயை அடித்துக் கொன்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
Advertisement