'விளைச்சலும், விலையும் இருக்கு' எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி

பேரையூர்: சுட்டெரிக்கும் வெயிலால் தேவை அதிகரித்து எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பேரையூர் பகுதி மக்களின் பலருக்கு முக்கிய தொழில் விவசாயம். நுாற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தினமும் வருமானம் தரும் கற்பக விருட்சமாக விவசாயிகள் இப்பயிரை கருதுகின்றனர்.

பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, சந்தையூர் பகுதி மண், தட்பவெப்ப நிலை எலுமிச்சை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. கிலோ ரூ. 60க்கு வியாபாரிகளிடம் வாங்கப்படுகிறது.

விவசாயிகள் கூறுகையில், ''எலுமிச்சை சாகுபடி நல்ல லாபம் தரும் விவசாயம். ஆட்கள் கூலி குறைவு. கடந்த மாதம் கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.60க்கு விலை போகிறது. நல்ல விளைச்சலும் உள்ளது.

தினமும் எலுமிச்சை பறிப்பதால் போதிய லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றனர்.

Advertisement