கிணறுகளில் நீர்மட்டம் குறைவு காய்கறி சாகுபடிக்கு சிக்கல்
சின்னமனூர்: தொடர்ந்து மழை பெய்யாமல், அதிக வெப்பம் நிலவுவதால், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பயிர்களை காப்பது எப்படி என விவசாயிகள் புலம்புகின்றனர்.
கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் காய்கறி, பழப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலானவற்றில் கிணற்று நீர் பாசனம் நடைபெற்று வருகிறது. குறைந்த சிலரே ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து பாசனம் செய்கின்றனர்.
கம்பம் வட்டாரத்தில் அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும், சின்னமனூர் வட்டாரத்தில் ஒடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், கன்னிசேர்வை பட்டி, அப்பிபட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களிலும் காய்கறி பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யவில்லை. மாறாக கடும் வெயில் அடிக்கிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது. தோட்டங்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் விவசாய பணிகளை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் புலம்ப துவங்கி உள்ளனர்.
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி