போதை பொருள் கண்டறிய புதிய மோப்ப நாய்

கடலுார்; மாவட்டத்தில் போதைப் பொருட்களை கண்டறிய புதியதாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் சேர்ப்பதற்கு, தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலுார் மாவட்ட காவல்துறைக்கு ஒரு மோப்ப நாய் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.,ஜெயக்குமார், புதிய மோப்ப நாய்க்கு ராக்கி என பெயரிட்டார். மோப்ப நாய்க்கு, கோவை பயிற்சி மையத்தில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்து மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு, போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியாக சேர்க்கப்பட உள்ளது. டி.எஸ்.பி., சார்லஸ், மோப்ப நாய் பிரிவு தலைமைக் காவலர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement