வேணுகோபால சுவாமி கோவிலில் மண்டல பூஜை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் 48 நாட்கள் நடந்தன. மண்டலாபிேஷக பூர்த்தி விழா நேற்று முன்தினம் நடந்தது.
மூலவர் அத்தி மரத்தாலானவர் என்பதால் அபிஷேகங்கள் செய்வதில்லை. இதற்கு பதிலாக உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாரதனை நடந்தது. மூலவர் வேணுகோபால சுவாமி ருக்குமணி சத்யபாமா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement