சாலை ஓரம் தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்

கூடலுார்: கூடலுார் நெடுஞ்சாலை ஓரத்தில் தீ வைத்து விடுவதால் வெளியேறும் புகை வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரங்களில் காய்ந்த இலை சருகுகள், குப்பை உள்ளிட்டவைகளை தீ வைத்து விடுகின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகை நெடுஞ்சாலையில் பரவுகிறது. எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத வகையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பகலில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் தீ வைப்பதால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகமாக உள்ளது. மேலும் கடந்து செல்லும் வாகனங்களில் தீ பரவும் அபாயமும் உள்ளது. அதனால் நெடுஞ்சாலை ஓரத்தில் தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement