ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடலுார்; வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார், வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. 29ம் தேதி, பாடலீஸ்வரர் கோவில் சிவகரகுளத்தில் இருந்து சிவகர தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, யாக சாலை பூஜைகள் துவங்கியது.
நேற்று காலை மகா தீபாராதனைக்குப்பின் யாகசாலையிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு, 9.50 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ், பாடலி சங்கர், இயக்குனர் சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இரவு முருகன் திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா நடந்தது.
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி