ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஏப்.3ல் திருக்கல்யாண கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா ஏப்.11ல் நடக்கிறது. ஏப்.3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 10:30 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.

ஏப்.7ல் இரவு 7:00 மணிக்குமேல் கருடவாகனத்தில் எழுந்தருளல், ஏப்.11பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7:05 மணிக்கு செப்புதேரோட்டம், மாலை 5:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவமும், ஏப்.15.,இரவு 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Advertisement