வயல்வெளி வைக்கோல் தீயில் எரிந்து சேதம்

நரிக்குடி: நரிக்குடி டி.வேலங்குடியில் வயல்வெளிகளில் கிடந்த வைக்கோல்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் முற்றிலும் எரிந்து சேதமானது.
நரிக்குடி டி.வேலங்குடியில் ஏராளமான ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தனர். அறுவடை செய்து நெல்களை விவசாயிகள் பிரித்து எடுத்துச் சென்று, வைக்கோல்களை ஆங்காங்கே போட்டுவிட்டு சென்றனர். இந்நிலையில் 50 ஏக்கரில் அறுவடை செய்த வைக்கோல்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். தீ மள மளவென பற்றி எரிந்து, பல கி.மீ. தூரம் வரை பரவியது.
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வயல்வெளியில் வாகனம் செல்ல முடியவில்லை. இதையடுத்து வீரர்கள் தீ யை பச்சை செடிகளை பறித்து, மக்களுடன் சேர்ந்து அணைக்க போராடினர். 2 கி.மீ., தூரம் வரை எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வைக்கோல்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி