தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு 'குண்டாஸ்'

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) ராக்கெட் ராஜா, 27; இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த பிப்ரவரி 21ம் தேதி மோ.வனஞ்சூரில் வினோத் என்பவர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவரது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த், உத்தரவிட்டார்.

கடலுார் மத்திய சிறையில் உள்ள ராஜாவிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை கள்ளக்குறிச்சி போலீசார் வழங்கினார்.

Advertisement