ஜூன் 15ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

1


சென்னை: குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.


துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களில் மே 5ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூன் 15ல் நடைபெற உள்ளது. பின்னர் முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். துணை ஆட்சியர் நிலையில் 28 பணியிடங்கள், டி.எஸ்.பி., நிலையில் 7 பணியிடங்கள், வணிக வரி உதவியாளர் நிலையில் 19 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையில் 7 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல நிலையில் 3 பணியிடங்கள், தொழிலாளர் உதவி ஆணையர் நிலையில் 6 பணியிடங்கள் என மொத்தம் 70 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.


பட்டப்படிப்பு முடித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/Group%20IA%20Notification_English_.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement