பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ

புதுடில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் , 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் முன்னணியில் இருக்கும் ஸொமேட்டோவில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஸொமேட்டோ அசோசியேட் ஆக்சிலேட்டர் புரோகிராம் (இசட்.ஏ.ஏ.பி) பிரிவின் கீழ் 1,500 வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகிகள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், ஸொமேட்டோ நிறுவனம், வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றும் 600 பேரை பணியிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நிறுவனத்தில் ஒரு வருடம் பணி முடித்த பிறகு பதவி உயர்வுக்காக காத்திருந்த இந்த ஊழியர்கள் தற்போது பணி நீக்கத்தை சந்தித்துள்ளனர்.
வாடிக்கையாளர் சேவையை தானியங்கி முறைக்கு மாற்றும் திட்டத்துடன் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




மேலும்
-
பிரதமர் விழாவு।க்கு 12,000 இருக்கையுடன் பந்தல்
-
ஒரு சதவீத கட்டண சலுகைக்கு 10 கட்டுப்பாடுகள் விதிப்பு
-
தணிக்கை அறிக்கை கவர்னரிடம் சமர்ப்பிப்பு
-
வாஜ்பாயி காலம் முதல் கச்சத்தீவு மீட்புக்கு ஆதரவு
-
மாப்பிள்ளைகள் தொகுதிக்கு அரசு ஐ.டி.ஐ., வேண்டும் தி.மு.க., - எம்.எல்.ஏ., கலகலப்பு
-
முதுநிலை பேராசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அவசியம்