காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 50 பேர் மனு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.

இதில், கமிஷனர் அருண் பங்கேற்று, இரு உதவி கமிஷனர்கள், இரு ஆய்வாளர்கள் உட்பட, 50 பேரிடம் குறைகளை கேட்டு, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.

பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இம்முகாமில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement