வாலிபருக்கு கத்திக்குத்து இருவர் கைது

செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை, 24. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், தகாத வார்த்தையில் பேசியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்றுமுன்தினம், முருகன், 35, அவரது நண்பர் செல்வாவும், 32, சேர்ந்து, சுனாமி நகர் பகுதியில், ஏழுமலையை கத்தியால் குத்தினர்.

இதில், பலத்த காயமடைந்த ஏழுமலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து முருகன், செல்வா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Advertisement