விலை சரிந்த புடலங்காய் கிலோ ரூ.11க்கு விற்பனை
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ரூ.25லிருந்து ரூ.11ஆக விலை குறைந்தது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை சுற்றுப்பகுதிகளில் புடலைங்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துஉள்ளது. பத்துநாட்களுக்கு முன் கிலோ புடலங்காய் ரூ.25க்கு விற்பனையான நிலையில் விலை சரிவடைந்து கிலோ ரூ.11 க்கு விற்றது.
வியாபாரி ஒருவர் கூறுகையில் 'இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் விலை மேலும் குறையலாம்' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement