தேசிய வேளாண் சந்தையில்ரூ.47,000க்கு தேங்காய் ஏலம்



தேசிய வேளாண் சந்தையில்ரூ.47,000க்கு தேங்காய் ஏலம்


ப.வேலுார்,:-ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது.ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 2,900 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
கடந்த வாரம், அதிகபட்சம் கிலோ, 52.52 ரூபாய், குறைந்தபட்சம், 39.10 ரூபாய், சராசரி, 47.18 ரூபாய் என, 67,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில், அதிகபட்சம் கிலோ, 57.29 ரூபாய், குறைந்தபட்சம், 38.41 ரூபாய், சராசரி, 56.29 ரூபாய் என, மொத்தம், 47,000 ரூபாய்க்கு தேங்காய் ஏலம் நடந்தது.

Advertisement