குத்துச்சண்டை: பைனலில் ஹிதேஷ்

புதுடில்லி: பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் நடக்கிறது. 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ், பிரான்சின் மக்கான் டிரவோர் மோதினர். இதில் ஹிதேஷ், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தேசிய சாம்பியன் ஜடுமானி சிங் (50 கிலோ), முன்னாள் ஆசிய சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோவிடம் 2-3 என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
நேரடியாக அரையிறுதியில் களமிறங்கிய இந்தியாவின் சச்சின் (60), 0-5 என போலந்தின் பாவெல் பிராச்சிடம் தோற்றார். மற்றொரு வீரர் விஷால் (90), 0-5 என உஸ்பெகிஸ்தானின் துராபெக்கிடம் தோல்வியடைந்தார். சச்சின், விஷால் என இருவருக்கும் வெண்கல பதக்கம் கிடைத்தன.

Advertisement