டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை

டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப்ராய் ரத்தோட். இவர் தற்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் உயர் பயிற்சியகத்தின் இயக்குனராக உள்ளார்.
அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன், சைபர் குற்றவாளிகள் போலியாக முகநுால் கணக்கு துவங்கி உள்ளனர்.
அந்த கணக்கில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும், நட்பில் இணைய அழைப்பு கொடுத்து உள்ளனர். பண மோசடியில் ஈடுபட, குற்றவாளிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர்.
இதை பார்த்த நண்பர்கள் சிலர், சந்தீப் ராய் ரத்தோட்டிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, முகநுால் நிறுவனத்திற்கும், சைபர் கிரைம் போலீசிலும், சந்தீப் ராய் ரத்தோட் புகார் அளித்துள்ளார். சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லக்னோவுக்கு 181 ரன்கள் இலக்கு; கில், சாய் சுதர்சன் அரைசதம்
-
பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
சிரோமணி அகாலி தள தலைவராக மீண்டும் தேர்வானார் சுக்பீர் பாதல்
-
மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி
-
மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்; மம்தா உறுதி
-
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: அசவுகரியம் ஏற்படலாம் - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement