ரயில் பயணியிடம் செயின் பறிப்பு
அரக்கோணம் சென்னை, கொரட்டூரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி, 65. இவரது மனைவி பால சரஸ்வதி, 60. இருவரும், திருப்பதி சென்றிருந்தனர்.
அங்கிருந்து, சென்னை சென்ட்ரல் வருவதற்காக, 'சத்ரபதி எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்தனர். ரயில், நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையம், 5வது நடைமேடையில் நின்றது.
பயணியர் இறங்கியவுடன் புறப்பட தயாரானது. அப்போது திடீரென ஒரு வாலிபர், ரயில் ஜன்னல் வழியாக கையை விட்டு, பால சரஸ்வதியின் 6 சவரன் செயினை பறித்து தப்பி ஓடினார். இது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லக்னோவுக்கு 181 ரன்கள் இலக்கு; கில், சாய் சுதர்சன் அரைசதம்
-
பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
சிரோமணி அகாலி தள தலைவராக மீண்டும் தேர்வானார் சுக்பீர் பாதல்
-
மகா கேவலமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார் பொன்முடி
-
மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்; மம்தா உறுதி
-
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: அசவுகரியம் ஏற்படலாம் - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement