கன்டெய்னர் லாரிமோதி டிரைவர் பலி


கன்டெய்னர் லாரிமோதி டிரைவர் பலி


ஓசூர்:மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் சுரேஷ் யாதவ், 33, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் அதிகாலை, 2:20 மணிக்கு பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் இ.எஸ்.ஐ., ரிங்ரோடு பஸ் ஸ்டாப் அருகே, பிக்கப் வாகனத்தை ஓட்டி சென்றார்.
அப்போது அவ்வழியாக கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த, தர்மபுரி மாவட்டம், சி.மோட்டுப்பட்டியை சேர்ந்த பிரசாந்த், 26, என்பவர், அதிவேகமாக சென்று பிக்கப் வாகனத்தின் பின்னால் மோதினார். இதில்
படுகாயமடைந்த சூரஜ் சுரேஷ் யாதவ், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிப்காட் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement