கடலாடி மார்க்கெட் பகுதியில் சேதமடைந்த ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கடலாடி: - கடலாடி நகர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அருகே தேவர் சிலையில் இருந்து காமராஜர் சிலை வழியாக மெயின் பஜார் முத்தாலம்மன் கோயில் வரை ரோடு சேதம் அடைந்துள்ளதால் மக்கள் சிரமப்படுன்றனர்.
கடலாடி மெயின் பஜாரில் இருந்து செல்லக்கூடிய சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் பெருகி வருகின்றன.
பொதுமக்கள் கூறியதாவது: கடலாடி நகர் பகுதி வழியாக கடலாடி நீதிமன்றம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஐ.டி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு பிரதான சாலையாக செல்கின்றனர். இந்நிலையில் சேதமடைந்த சாலையால் முதியவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
கடலாடி வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் புதியதாக தார் ரோட்டை தரமாக அமைக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
குனியமுத்துாரில் தொழிலாளி கொலை; கைதான நால்வரிடம் போலீஸ் விசாரணை
-
குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து ஒன்றிய அலுவலகம் முற்றுகை
-
எத்தனால் இறக்குமதிக்கு தடை இந்தியா மீது அமெரிக்கா புகார்
-
விசைத்தறி வேலை நிறுத்தம் மறுசுழற்சி கூட்டமைப்பு ஆதரவு
-
சரவணம்பட்டியில் மேம்பாலப் பணி; 'மெட்ரோ' மேற்கொள்ள ஆலோசனை
-
ஐந்தாண்டுகளாக மூடிக்கிடக்கிறது ரூ.25 லட்சத்தில் உருவான நுாலகம்