அண்ணனை 'வெட்டிய' தம்பி

பவானி: ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி, நல்லாமூப்பனுாரை சேர்ந்தவர் கணபதி, 64; இவருடைய இரண்டு ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரை விற்க முயற்சி செய்தார்.

இதற்கு தம்பி சிதம்பரம், அவரது மகன் பாரதி சேர்ந்து, வில்லங்கம் இருப்பதாக கூறி வந்தனர். சில நாட்க-ளுக்கு முன் நிலத்தில் இருந்த அத்துக்கல்லை சிதம்பரம் பிடுங்கி, வேறிடத்தில் போட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தக-ராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பி சிதம்பரம், கணபதியின் கை விரலை கத்தியால் வெட்டி விட்டு ஓடிவிட்டார். புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement