கண்ணொளி தந்த உன்னத சேவை

அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது. மொத்தம் 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், கண் பரிசோதனைகள் செய்தனர். 89 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது; 61 பேர், அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை, லென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Advertisement