உலர்களம் அமைக்க கோரிக்கை
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே, மக்காச்சோள உலர்களம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு வழியாக பாலப்பட்டு, தும்பை, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தற்போது அரசம்பட்டு கிராமத்தில் அதிக அளவில் மக்காசோளத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அங்கு போதிய உலர்களம் இல்லாததால், அறுவடை செய்த மக்காச்சோளத்தை, நெடுஞ்சாலையில் உலர வைக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு உலர் களம் அமைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 9ல் வெற்றி நாள் கொண்டாட்டம்; ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு
-
வக்ப் சட்டம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம்; ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் அமளி
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
Advertisement
Advertisement