கொள்முதல் விலையை குறைப்பதால் கோழிப்பண்ணையாளர்களுக்கு நஷ்டம்

நாமக்கல்: ''கொள்முதல் விலையை விட குறைத்து கோழி பிடிப்பதால், கோழிப்பண்ணையாளர்கள் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்,'' என, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி

சுப்ரமணியம் கூறினார்.


தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகி-றது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.


கடந்த, மார்ச், 1ல், கொள்முதல் விலை, 84 ரூபாய் என நிர்-ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏற்றம் இறக்கம் காணப்-பட்டு, 31ல், 118 ரூபாய், 3ல், 102 ரூபாய், 5ல், 94, 6ல், 96 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று, ஏழு ரூபாய் குறைந்து, 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறு-கையில், ''கொள்முதல் விலையில் இருந்து, ஒரு கிலோவிற்கு, 20 முதல், 25 ரூபாய் வரை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். இதனால், பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்திற்குள் தள்ளப்பட்-டுள்ளனர். கொள்முதல் விலைக்கே கோழிகளை பிடித்தால் மட்-டுமே, பண்ணையாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்,'' என்றார்.

Advertisement