சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
அந்த வகையில் சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தீவிர நடவடிக்கைக்கு பயந்து நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர். நேற்று அந்த வகையில், தண்டேவாடாவில் 26 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில், நக்சல்கள் 22 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இவர்களில் சிலர் முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா
-
ஒளி மற்றும் மரபு
-
கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்; மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
-
டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ்; தேசிய நெடுஞ்சாலையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது
-
ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதித்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: அண்ணாமலை
-
உதவித்தொகை பெறும் மாணவர் பட்டியலில் குளறுபடி; அன்புமணி புகார்