மா மரங்களை வெட்டியவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : பெரியகுளத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த்ஜான் என்பவருக்கு சொந்தமான 7 ஏக்கர் மாந்தோப்பு, மஞ்சளாறு வழுக்குபாறைக்கு அருகே உள்ளது.

தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் தோட்ட காவலராக உள்ளார்.

இதே பகுதியைச் சேர்ந்த கணேசனுக்கு இந்தப்பகுதியில் இடம் உள்ளது. ராஜேந்திரன் காவலராக உள்ள ஜஸ்வந்த்ஜான் தோட்டத்தை கணேசன் ஆக்கிரமிப்பு செய்ததாக நீதி மன்றத்தில் வழக்கு நடக்கிறது.

இந்நிலையில் கணேசன், ஜஸ்வந்த் ஜான் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மா மரங்களை வெட்டி டிராக்டரில் ஏற்றியுள்ளார்.

ராஜேந்திரன் புகாரில்,தேவதானப்பட்டி போலீசார் கணேசனிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement