எமனேஸ்வரத்தில் நடந்த சீதாராமன் திருக்கல்யாணம்

பரமக்குடி : பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயில் ராமநவமி விழாவில் சீதாராமன் திருக்கல்யாணம் நடந்தது.

தினமும் மூலவர் மற்றும் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சீதா ராமன் திருக்கல்யாணம் நடந்தது.

தொடர்ந்து நேற்று இரவு 7:00 மணிக்கு சீதாராமன் திருமண கோலத்தில் அலங்காரமாகி பூப்பல்லக்கில் வீதிவலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement