1 வயது குழந்தைக்கு 'தொல்லை' ஒடிசா வாலிபருக்கு கால் முறிவு

பள்ளிப்பாளையம்: ஒடிசாவை சேர்ந்த, 25 வயது பெண் ஒருவர், கணவரை பிரிந்து, இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தையுடன், பள்ளிப்பா-ளையம் அருகே உள்ள முனியப்பன் நகர் பகுதியில் வசித்து வரு-கிறார். இவரும், ஒடிசாவை சேர்ந்த சம்மர்தாஸ், 33, என்ற வாலி-பரும் ஒன்றாக வசித்தபடி, நவீன விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.


அப்போது, ஒரு வயது பெண் குழந்தையை துாக்கிக்கொண்டு, சம்மர்தாஸ் வெளியில் சென்றார். சிறிது நேரத்திற்கு பின் குழந்-தையுடன் வீடு திரும்பினார். அப்போது, குழந்தையின் கை, கால் பகுதிகளில் ரத்த காயம் காணப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெண், குழந்தையை சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பரிசோதனையில், குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது தெரியவந்தது.


இதுகுறித்து புகார்படி, திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன் மற்றும் போலீசார், சம்மர்தாசை கைது செய்து, நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அப்போது, தப்பி ஓட முயன்ற அவர், தவறி விழுந்து கை, காலில் முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்-துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Advertisement