முஸ்லிம் வாழ்வாதாரம் உயரும்

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, தி.மு.க., அரசு. மக்களை தொடர்ந்து ஏமாற்றுகிறது.

கஜானாவை நிரப்ப, உரிய வழி தேடாமல், டாஸ்மாக்கை மட்டும் நம்புகின்றனர்.

சட்டம் - ஒழுங்கை சீர் படுத்த முடியாமல் உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தடுமாறுகிறார். தமிழகத்தில், இரு மொழி கொள்கைக்கு வெண்சாமரம் வீசும் தி.மு.க.,வின் மோசடித்தனத்தை மக்கள் விரும்பவில்லை. மூன்றாவது மொழி கற்கவே அனைவரும் விரும்புகின்றனர்.

முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பான சட்டமாக வக்ப் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்கள் வாழ்வாதாரம் உயரும்.

வாசன், தலைவர், த.மா.கா.,

Advertisement