மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை
ராமேஸ்வரம்:கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர்.
கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் சீசனாக உள்ளதால் இச்சமயத்தில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றால் மீன்கள் உற்பத்தி பாதிப்பதுடன் மீனவர்களுக்கும் மீன்வரத்தின்றி நஷ்டம் ஏற்படும். ஆகையால் கோடை காலத்தில் இரு மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என கடல்சார் விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி 2001 முதல் கோடை காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. வழக்கம் போல் இந்த ஆண்டு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரை உள்ள 8000 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் ஏப்.,13 முதல் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
-
தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்பட ஆர்வம்; எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி பேச்சு