ஊருக்குள் நுழைய 6 பேருக்கு தடை விதிக்க பரிந்துரை

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், கோட்டைமேடு, காமராஜர் வீதியை சேர்ந்தவர் லோகு ( எ) லோகநாதன், 30; அருந்ததிபுரம் முத்துகுமரன், 27; சுப்பையா நகர் மணிகண்டன், 23; நோணாங்குப்பம் வீதியை சேர்ந்த யுவராஜ், 27; ஈஸ்வரன் நகரை சேர்ந்த சத்தியசீலன், 24; புதுநகரை சேர்ந்த நவீன்குமார், 20, ஆகிய 6 பேர் மீது அரியாங்குப்பம் போலீசில் அடிதடி, ரவுடிசம், பொது இடத்தில் தகராறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் ஊருக்குள் வந்தால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், கலெக்டர் குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement