சிவகங்கையில் பங்குனி தேரோட்டம்

சிவகங்கை: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஏப்., 2 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தினமும் காலை 8:00 மணிக்கு மண்டகப்படி எழுந்தருளினார்.
தினமும் இரவு 8:30 மணிக்கு மயில், ரிஷபம், அன்னம், யானை, ஆட்டுகிடாய், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. 9ம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று மாலை 5:06 மணிக்கு தேரின் கீழ் சிதறு தேங்காய் உடைத்து, அபிேஷகம் செய்த பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.
தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, நிலையை அடைந்தது. 10 ம் நாளான இன்று தீர்த்தவாரி, இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
மேலும்
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு