சிவகங்கையில் பங்குனி தேரோட்டம் 

சிவகங்கை: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஏப்., 2 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தினமும் காலை 8:00 மணிக்கு மண்டகப்படி எழுந்தருளினார்.

தினமும் இரவு 8:30 மணிக்கு மயில், ரிஷபம், அன்னம், யானை, ஆட்டுகிடாய், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. 9ம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று மாலை 5:06 மணிக்கு தேரின் கீழ் சிதறு தேங்காய் உடைத்து, அபிேஷகம் செய்த பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது.

தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, நிலையை அடைந்தது. 10 ம் நாளான இன்று தீர்த்தவாரி, இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

Advertisement