திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் தேரோட்டம்

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
ஏப்.2ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.
சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் காலை 9:30 மணிக்கு கிளம்பியது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12:30 மணிக்கு நிலையை அடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல்கள் 9 பேர் உட்பட 22 பேர் சரண்டர்!
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
Advertisement
Advertisement