ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் செப்பு தேரில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் காலை 7:05 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் செப்பு தேரினை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல நான்கு ரதவீதிலும் தேர் சுற்றி வந்து ஒரு மணி நேரத்தில் நிலையம் சேர்ந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொன்முடியை கண்டித்து இந்து புரட்சி முன்னணி ஆர்ப்பாட்டம்
-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் மீது வழக்கு
-
காரியாபட்டியில் சாவியான கோடைகால நெற்பயிர்கள்
-
எடை குறைப்பு நிலையம் ரூ 1.25 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
-
2 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை
-
கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது
Advertisement
Advertisement