பொன்முடி அறிக்கை

'மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்'

'பலரும் தலைகுனியும் வகையில், தகாத பொருளில் பேசியதற்காக மனப்பூர்வமாக மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஓர் உள்ளரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில், தவறான சொற்களை பயன்படுத்தி, நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து, உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து, நான் மிகவும் வருந்துகிறேன்.

பலருடைய மனதை புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும், நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'பலரும் தலைகுனியும் வகையில், தகாத பொருளில் பேசியதற்காக மனப்பூர்வமாக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஓர் உள்ளரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில், தவறான சொற்களை பயன்படுத்தி, நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து, உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து, நான் மிகவும் வருந்துகிறேன்.

பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில், இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும், நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement