திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே இளம்பெண் துாக்கிட்டு இறந்தது குறித்து விசாரணை நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், கோவுலாபுரத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 29, சென்னை தனியார் கார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கவிதா, 25; திருவெண்ணெய்நல்லுாரில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஊழியர். இருவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கவிதா, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. எனினும், அவரின் தலை, நெற்றி போன்ற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, கவிதாவின் உறவினர்கள் மருத்துவமனை முன், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து, கலைந்தனர்.
திருமணமாகி ஏழு மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும்
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு; ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பான ஆட்டம்
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்