குழந்தைகளுடன் பெண்கள் மாயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 32; பைக் மெக்கானிக். அவரது மனைவி ராதிகா, 27. ராதிகாவின் தங்கை ராஜேஸ்வரி, 25. இருவரும் நர்ஸ் ஆக உள்ளனர். ராஜேஸ்வரிக்கு, 26 நாட்களுக்கு முன்தான் திருமணம் ஆனது.

இந்நிலையில், கடந்த மார்ச் 25ல் பெற்றோர் வீட்டுக்கு வந்த ராதிகா, ஏப்., 9ல் குழந்தைகளுடன் தன் கணவர் வீட்டுக்கு செல்வதாகக் கூறி, தன் தங்கை ராஜேஸ்வரியையும் உடன் அழைத்துச் சென்றார். ஆனால், நான்கு பேரும் கிருஷ்ணகுமார் வீட்டுக்குச் செல்லவில்லை. இருவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகுமார் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement