ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் பார்வையாளர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை பிடித்தனர்.


போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது காளை முட்டியதில் பார்வையாளர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement