அயோத்தி ராமர் கோவிலுக்கு இ-மெயிலில் மிரட்டல்; விசாரணையில் இறங்கிய போலீசார்

1

அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அறக்கட்டளைக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. இதை அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறி உள்ளதாவது'


நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது, தமிழகத்தில் இருந்து ஒருவர் இதை அனுப்பி உள்ளார். அது என்ன வகையான மிரட்டல் என்பதை கூற முடியாது.விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.


இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ராமர் கோவிலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் எந்த வகையிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Advertisement