சிங்காரப்பேட்டையில் கிராமப்புற மதிப்பீடு விழா


சிங்காரப்பேட்டையில் கிராமப்புற மதிப்பீடு விழா


ஊத்தங்கரை:சிங்காரப்பேட்டையில் கலசப்பாக்கம் அரசிந்தர் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்களின், கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தில், கிராமப்புற மதிப்பீடு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பலராமன் தலைமை வகித்தார். விரிவாக்கத்துறை ஆசிரியர் சேட்டு முன்னிலை வகித்தார். மாணவர் சக்திவேல் வரவேற்றார்.
விழாவில், மாணவர்கள் மக்கள் தொகை, கல்வி அறிவு விகிதம், சமூக வரைபடம் மற்றும் விவசாயிகள் வகைப்பாடு, மண் வகைப்பாடு, நீர்ப்பாசன வகைப்பாடு மற்றும் சிங்காரப்பேட்டையில் உற்பத்தி செய்யப்படும் முக்கிய பயிர்கள் பற்றியும் மற்றும் பிரச்னைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர். இதில், கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் சமீர்கான் நன்றி கூறினார்.

Advertisement