மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி மின்துறை வரும் ஐந்தாண்டுக்கான மின் கட்டண உயர்வு உத்தேச பட்டியலை மின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
மின்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புதுச்சேரி மின்துறை ஒவ்வொரு ஆண்டும் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்து, மின் நுகர்வோருக்கு விநியோகம் செய்கிறது.
கொள்முதலுக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சமன் செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயர்வை மின் இணை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து, மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.
அதன்படி இந்த நிதியாண்டு முதல் வரும் 2029 - 30 நிதியாண்டு வரையிலான ஐந்தாண்டுக்கு உத்தேச மின் கட்டண உயர்வை மின் இணை ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்வதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மின் நுகர்வோர்களிடம் கருத்து கேட்பு நடத்தி மின் கட்டணத்தை உயர்த்த இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் 2025-26ம் ஆண்டு மின் கட்டண உயர்வு அமலாக்கப்படவில்லை.
ஐந்தாண்டு காலம் மின் கட்டணம் உயர்வு சம்பந்தமாக லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ்., கருத்தரங்க கூட்டத்தில் 29ம் தேதி கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'
-
வாலிபர் தற்கொலை