வி.சி., பொதுக் கூட்டம் 

திண்டிவனம் : வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி வி.சி., கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் திலீபன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி.. சிறப்புரையாற்றனார்.

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், காங்., நகர தலைவர் விநாயகம், இந்திய கம்யூ., இன்பஒளி மற்றும் ம.தி.மு.க., - எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.

Advertisement