பஸ்சில் தவறி விழுந்த நர்ஸ் காயம்
ஆண்டிபட்டி : உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் மனைவி வைசாலி 23, மதுரையில் தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார்.
பணி முடித்து பண்ணைப்புரம் செல்வதற்காக மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ்சில் சென்றுள்ளார். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்சிலிருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றவர், அவர் வந்த பஸ்சை தவற விட்டுள்ளார்.
பின்னர் கம்பம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். தவறுதலாக ஏறிய பஸ்சில் இருந்து இறங்குவதற்காக படிக்கட்டில் நின்றுள்ளார்.
பஸ் நகர்ந்ததில் நிலை தடுமாறிய வைசாலி கீழே விழுந்தார்.
இடது கணுக்காலில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் பலத்த காயம் அடைந்த அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் நடராஜனிடம் ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை