சிறை புதரில் கஞ்சா, மொபைல்போன் கண்டெடுப்பு
புழல், புழல் சிறையில், 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் மொபைல்போன், கஞ்சா உள்ளிட்டவை, சிறை காவலர்கள் சோதனையின்போது, அவ்வப்போது பறிமுதல் செய்யப்படுவது தொடர்கிறது.
இந்நிலையில், விசாரணை சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே, துாய்மை பணியின்போது, புதரில் கேட்பாரற்று பொட்டலம் ஒன்று கிடந்தது.
பொட்டலத்தில், ஒரு மொபைல் போன், 39 கிராம் கஞ்சா, சிகரெட், லைட்டர் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தன. சிறை அதிகாரி அளித்த புகாரில், புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
***
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீடு கட்டும் பணியில் புதிய வகை பொருட்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை!
-
கட்டுமான பணிக்கு மொத்தமாக மரம் வாங்கும் நிலையில் கவனிக்க வேண்டியவை!
-
இந்தியாவின் அதிருப்தி எதிரொலி: பாக். உடனான கடற்படை பயிற்சி திட்டத்தை ரத்து செய்த இலங்கை
-
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
Advertisement
Advertisement