பொதுமக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 29 பேர் மனு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார்.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, துணை கமிஷனர்கள் ஹரி கிரண் பிரசாத், சுப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement