பாலியல் பலாத்காரம் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை

சிவகங்கை:சிவகங்கையில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாய் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முருகேசன் 63. இவர் பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் 2016 அக்.16ல் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (1)
juveee - ,
17 ஏப்,2025 - 18:35 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
-
கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு
-
சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!
-
வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது
-
டில்லியில் அதிகாலை இடிந்து விழுந்த கட்டடம்: 4 பேர் பரிதாப பலி
-
காரைக்கால் துறைமுகத்தில் படகு எரிந்து ரூ.10 லட்சம் சேதம்
Advertisement
Advertisement