டில்லியில் அதிகாலை இடிந்து விழுந்த கட்டடம்: 11 பேர் பரிதாப பலி

புதுடில்லி: டில்லியில் பலமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டில்லியில் முஸ்தபாபாத் நகரில் இருந்த பலமாடி கட்டடம் ஒன்று இன்று (ஏப்.19) அதிகாலை திடீரென சரிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அங்குள்ளோர் அச்சம் அடைந்து ஓடினர்.
சரிந்து விழுந்த கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை. விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.


மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது