பேரூராட்சி துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது
சின்னசேலம்: சின்னசேலத்தில் பேரூராட்சி துாய்மை பணியாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம், காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜேந்திரன், 55; பேரூராட்சியில் தூய்மை பணியாளர்.
இவர் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு அதே அலுவலகத்தில் பணிபுரியும் வசந்தி என்பவருக்கு பணம் கொடுத்தார். அதனை ராஜேந்திரன் திரும்ப கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் உறவினரான, அதே பகுதி காந்திநகரை சேர்ந்த நடேசன் மகன் செல்வராஜ்,49; என்பவர் ராஜேந்திரனை கடுமையாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்தவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரில் வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
Advertisement
Advertisement